Thursday 11 June 2020

செப்ட்ம்பரில் பள்ளிகளை திறக்கலாம்- NTUP

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பினால் மூடப்பட்ட பள்ளிகளை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் திறக்கப்பட வேண்டும் என்று NUTP எனப்படும் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் பரிந்துரைத்துள்ளது.

பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் வரும் ஜூன் 24ஆம் தேது முதல் பள்ளிகளுக்குச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகள் எப்போது செயல்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவிட்-19 பாதிப்பு இப்போது தணிந்துள்ள நிலையில் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் மீண்டும் பள்ளிகள் செயல்படுவதற்கு உத்தேசிக்கபடலாம் என்று அதன் தலைவர் அமினுடின் அவாங் தெரிவித்தார்.

No comments:

Post a Comment