Friday 12 June 2020

ஐவர் செனட்டர்களாக பதவியேற்கவுள்ளனர்

கோலாலம்பூர்-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தற்போது ஆட்சி செய்து வரும் நிலையில் மேலவை உறுப்பினர்களாக ஐவர் வரும் 16ஆம் தேதி செனட்டர்களாக பதவி பிரமாணம் எடுக்கவுள்ளனர்.

அம்னோவின் முன்னாள் அமைச்சர்களான ராய்ஸ் யாத்திம், ரட்ஸி சேய்க் அஹ்மாட் ஆகியோருடன் பாஸ் கட்சியின்  உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மாட், பாஸ் ஆதரவு கிளப்பின் தலைவர் என்.பாலசுப்பிரமணியம், துன் மகாதீரின் முன்னாள் அரசியல் செயலாளர் முகமட் ஸாயிட் முகமட் அரிப் ஆகியோரே செனட்டர்களாக நியமனம் செய்யப்படவுள்ளனர்.

 வரும் 16ஆம் தேதி காலை 10.00 மணியளவில் மேலவை சபாநாயகர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முன்னிலையில் இவர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment