Wednesday 3 June 2020

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு புதிய SOP வரையப்பட்டுள்ளது

கோலாலம்பூர்-
கோவிட்-19 தொற்றால் மூடபட்ட பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு ஏதுவா புதிய நடைமுறை வழிகாட்டல் (SOP) வரையப்பட்டுள்ளது.

பள்ளி தினம் குறைப்பு, வகுப்பறையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு, மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் முககவசம் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகளை உள்ளடக்கி இந்த புதிய நடைமுறை வழிகாட்டல் வரையப்பட்டுள்ளது.

மேலும், பாட நேரங்கள், குறைப்பது, பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றுக்கு புதிய நடைமுறை வழிகாட்டலை NUTP எனப்படும் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் வரைந்துள்ளது.

ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் நலன், கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டு வரையப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறை வழிகாட்டி கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்  என்ற அச்சங்கத்தின் தலைவர் அமிருடின் அவோங் கூறினார்.

No comments:

Post a Comment