Thursday 11 June 2020

திடீர் தேர்தலுக்கு தயார்- தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர்-
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் திடீர் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள மலேசிய தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக அதன் ஆணையர் டத்தோ அஸார் அஸிஸான் ஹருண் தெரிவித்தார்.

அரசியல் சூழல் படுமோசமாக புகைந்துக் கொண்டிருக்கும் இக்கட்டான சூழலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் தற்போது நாட்டில் நிலவும் கோவிட்-19 பிரச்சினைக்கு மத்தியில் திடீர் தேர்தல் நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எப்போதும் விழிப்புடனே உள்ளோம் என்றார் அவர்.

தற்போதைய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம்  பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அதன் அரசு கலைக்கப்பட்டு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment