Sunday 29 October 2017

ஐபிஎப் கட்சியின் கோரிக்கைகள் நிறைவேற்றம் - பிரதமருக்கு நன்றி

கோலாலம்பூர்-
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ள 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் (பட்ஜெட்) ஐபிஎப் கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைந்துள்ளது என அக்கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இந்த பட்ஜெட்டில் தனியார் துறை பெண் ஊழியர்களுக்கான பிரசவ கால விடுமுறை நீடிப்பு, பொது உயர்கல்விக் கூடங்களில் இந்திய சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு  அதிகரிப்பு,  பெண்களை ஊக்குவிக்கும் வகையிலான நலத் திட்டங்கள் ஆகியவற்றை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்துள்ளார்.
நாட்டின் ஆக்கசக்தியாக பெண்கள் உருவெடுக்கும் வகையில் அவர்களுக்கான நலத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஐபிஎப் கட்சியில் பேரவையில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் ஐபிஎப் கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்த டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு நன்றியை கூறிக் கொள்வதாக டத்தோ சம்பந்தன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment