Tuesday 31 October 2017

இந்திய சமுதாயத்திற்கான ஒதுக்கீடுகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வோம்

ஈப்போ-
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த 2018க்கான பட்ஜெட் ஓர் ஆக்ககரமானது ஆகும். இந்திய சமுதாயத்திற்கு நன்மையளிக்கும் வகையிலான பல திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளது என ஈப்போ பாராட் தொகுதி மஇகா துணைத் தலைவர் பாலையா வலியுறுத்தினார்.
இந்திய சமுதாயம் பல்வேறு நிலைகளில் முன்னேற்றம் காண்பதற்கு ஏதுவாக இந்த பட்ஜெட்டில் பல திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். குறிப்பாக  அமானா சஹாம் பங்குகள், தெக்குன் கடனுதவி, தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு, அரசு- பொது பல்கலைக்கழகங்களில் 7% அதிகரிப்பு என பல நல்திட்டங்களை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்துள்ளார்.

இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் மூலம் நமது வாழ்வாதாரத்தை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment