Friday 30 June 2017

தண்டவாளத்திலிருந்து விலகியது ரயில்

ஜோகூர்பாரு-
31 பெட்டிகளைச் சுமந்துக் கொண்டு ஜோகூர் துறைமுகத்திலிருந்து ஸ்கூடாய் நோக்கி சென்றுக் கொண்டிருந்த கேடிஎம் கார்கோ ரயில் ஒன்று தண்டவாளத்திலிருந்து விலகி நடுசாலையில் வந்து நின்றது.

இன்று ஜோகூர் துறைமுகத்திலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு ஸ்கூடாய் நோக்கி சென்று கொண்டிருந்தபோது காலை 11.55 மணியளவில் ரயிலின் இயந்திரப் பகுதி தண்டவாளத்திலிருந்து விலகி சாலையில் ஓடியது.

இச்சம்பவத்தின்போது கேடிஎம் பணியாளர்கள் இருவர் மட்டுமே ரயிலில் இருந்துள்ளனர். காயம் ஏதுமின்றி அவர் உயிர் பிழைத்ததாக மாநில சுற்றுச்சூழல், தகவல் குழுவின் தலைவர் டத்தோ அயூப் ரஹ்மாட் குறிப்பிட்டார்.


நடுசாலையில் ரயில் நின்றதால் ஜோகூரிலிருந்து தஞ்சோங் லங்சாட் நோக்கி செல்லும் பாதையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

No comments:

Post a Comment