Saturday 17 June 2017

குற்றவாளிகளுக்கு தேவை கடும் தண்டனை - ஆவேசக் குரல்களின் வேதனை


ஈப்போ-
தனியார் கல்லூரியில் இசை அமைப்பாளருக்கான  உயர்கல்வியை பயிலவிருந்த பினாங்கைச் சேர்ந்த தி.நவீனின் (வயது 18) மரணம் பல்வேறு தரப்பினரிடம் ஆவேசத்தையும் அதிருப்தி அலையையும் ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சனிக்கிழமை 5 மாணவர்களால் பகடிவதைக்கு உள்ளாகி மிக கொடூரமாக தாக்கப்பட்ட நவீன், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மரணமடைந்தார்.

இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருந்த  நவீனின் மரணத்திற்கு நியாயம் வேண்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற ஆவேசக் குரல் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

துன்புறுத்தப்படும்போது நவீன் அனுபவித்த வேதனைகளை அந்த ஐந்து பேரும் உணரும் வகையில் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.


இந்த ஐவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனையும் மரண வேதனையை ஏற்படுத்தக்கூடிய பிரம்படி தண்டனையையும் இல்லையேல் மரண தண்டனை வழங்க வேண்டும் என அபிராம் சமூக நல இயக்கத்தின் தலைவர் சண்முகம், திருமதி மகேஸ்வரி, திருமதி லெட்சுமி நாயர், சரவணன், செல்வி விலாஷினி, செல்வி அபிராமி, செல்வி ரஞ்சினி, திருமதி வேணி, விஜியன், சிவா, கவியரசன், பாலமுருகன், ஜீவன் ஆகியோர் தங்களது ஆதங்கத்தை வெளிபடுத்தினர்.

இளைஞர் நவீன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய ஐவருக்கு எதிராக வழங்கப்படும் தண்டனை குண்டர் கும்பல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளியாக அமைய வேண்டும் எனவும் நவீனின் மரணம் மூலம் பகடிவதையின் விபரீதம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்திட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment