Tuesday 5 December 2017

டிபிகேஎல் அபராதம்: பிப்.28 வரை சிறப்பு கழிவு- டத்தோ லோக பால மோகன்

கோலாலம்பூர்-
கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்) கடந்த மூன்றாண்டுகளில் விதித்துள்ள அபராத் தொகை செலுத்துவதற்கு கழிவு வழங்கப்படவுள்ளது என கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ லோக பால மோகன் தெரிவித்தார்.

போக்குவரத்து குற்றங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை 3.2 மில்லியன் பேர் பெற்றுள்ளனர். இதன் தொகை 10 மில்லியன் வெள்ளி ஆகும். வரும் 15ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை கழிவு விலையில் அபராதத் தொகையை செலுத்தலாம்.

மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு வெ.20,  வாகனமோட்டிகளுக்கு வெ.30,  பேருந்து உட்பட பலவற்றுக்கு வெ.50 என கழிவு வழங்கப்படவுள்ளது. இது கழிவு போக்குவரத்து குற்றங்களுக்கு மட்டுமே. மாறாக நீதிமன்றத்தால் கறுப்புப் பட்டியல் இடப்பட்டவர்களுக்கு இல்லை என அவர் சொன்னார்.

அடுத்தாண்டு பிப்ரவரி 28க்கு பின்னர் இந்த கழிவு வழங்கப்படாது என குறிப்பிட்ட டத்தோ லோக பால மோகன், இரண்டு மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கழிவை அபராதம் விதிக்கப்பட்டவர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு இடங்களில் உள்ள டிபிகேஎல் முகப்பிடங்களில் இந்த அபராதத்தை செலுத்தலாம் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment