Saturday 30 December 2017

தீ விபத்து: கம்போங் பாருவில் 15 வீடுகள் தீக்கிரை


கோலாலம்பூர்-
இங்குள்ள கம்போங் பாருவில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் 15 வீடுகள் எரிந்து தீக்கிரையாயின. இந்த தீச்சம்பவம் காலை 8.00 மணியளவில் வெளிநாட்டினர் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் ஏற்பட்ட தீயால் நிகழ்ந்தது.

காலை 9.30 மணிக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து தித்திவங்சா, ஹங் துவா, ஜாலான் துன் ரசாக், கிராமாட், பண்டார் துன் ரசாக் ஆகிய தீயணைப்பு,  நிலையத்திலிருந்து வந்த 24 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீச்சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என தீயணைப்பு பேச்சாளர் ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment