Tuesday 22 October 2019

என் பேச்சுரிமையை யாரும் தடுக்க முடியாது - பேராசிரியர் இராமசாமி

ரா. தங்கமணி

கோலாலம்பூர்-
இந்நாட்டின் குடிமகனான எனக்கு பேச்சுரிமை உள்ளது. அதனை யாரும் தடுக்க முடியாது. ஆயினும் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக பினாங்கு இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்.
அண்மையில் ரவாங்கில் நடைபெற்ற போலீசாரின் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கை பிரஜை உட்பட இரு இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து 'புதிய அரசாங்கம்; பழைமைவாத போலீஸ்' எனும் தலைப்பில் கருத்து பதிவிட்டிருந்தேன்.  இதன் தொடர்பில் விளக்கம் கேட்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
தமது கருத்து குறித்து உரிய விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன்.

இந்நாட்டு குடிமகனான எனக்கு பேச்சுரிமை சுதந்திரம் உள்ளது. அதனை யாரும் தடுக்க முடியாது. 'நான் தீவிரவாதியா? மிதவாதியா?' என்ற தலைப்பில் கூட கருத்து பதிவிட்டிருந்தேன்.

நாட்டின் தற்போதைய சூழலில் பேச்சுரிமை பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது. அநீதிக்கு எதிரான எனது குரல்வளையை யாரும் நெரிக்க முடியாது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு வருகை தந்த பேராசிரியர் இராமசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

இன்று காலை இராமசாமிக்கு ஆதரவாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, செராஸ் நகராட்சி மன்ற உறுப்பினர் சி.நனபாலன் உட்பட திரளானவர்கள் புக்கிட் அமான் முன்புறம் திரண்டனர்.

No comments:

Post a Comment