Tuesday 1 October 2019

விழுதுகளின் மாமாங்கப் பெருவிழா

பூச்சோங்-
ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியின் 12ஆவது ஆண்டை முன்னிட்டு  கடந்த சனிக்கிழமை 28ஆம் தேதி பூச்சோங் தமிழ்ப்பள்ளியில் மாமாங்கப் பெருவிழா மிகச் சிறப்பாக நடந்தேறியது. விழுதுகள் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை வற்றாத ஆதரவு வழங்கி வரும் ரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் இந்த மாமாங்கப் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது.
காலை மணி 8.00க்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியில் யோகா, கபடி, உரி அடித்தல் எனும் போட்டிகளில் பெற்றோர்கள், குழந்தைகள் கலந்து கொண்டு பரிசு பொருட்கள் தட்டிச் சென்றனர்.

அதுமட்டுமின்றி, மருத்துவ முகாம், கண் பரிசோதனை, ரத்த தானம், அரசாங்க நிறுவனங்களின் முகப்புகள் என பல அரிய விஷயங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
அதோடு, நம் நாட்டின் புகழ்பெற்ற தன்முனைப்பு பேச்சாளர் பேராசிரியர் டாக்டர் காதர் இப்ராஹிம் நம் வாழ்க்கை நம் கையில் எனும் தலைப்பில்  உரையாற்றினார்.

இந்த மாமாங்கப் பெருவிழாவில் விழுதுகளின் அறிவிப்பாளர்கள் ரேவதி மாரியப்பன், ஸ்ரீ குமரன் முனுசாமி, செல்வகுமாரி செல்வராஜூ, கபிலஸ் கணேசுன், குணசீலன் சிவகுமார், அகலியா மணியம், ஆஸ்ட்ரோ தமிழ்ச் செய்திகளின் தொகுப்பாளர்கள் ஷாலினி பிரியா, மகேந்திரன் வேலுப்பிள்ளை, நம் நாட்டின் உள்ளூர் கலைஞர்களான டேனிஸ், யுவராஜ் கிருஷ்ணசாமி, நிவாஷன் என பலர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment