Monday 21 October 2019

இந்திய இளைஞர்களுக்கான 'யெஸ்' திட்டம்

ஷா ஆலம்-
இந்திய இளைஞர்களை சொந்த தொழில் துறையில் முன்னேற்றம் காணும் செய்யும் வகையில் மித்ராவும் சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்கள் ஏற்பாட்டில் 'யெஸ்' (YES) திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பி40 பிரிவைச் சேர்ந்த, வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களை பல்வேறு துறைகளில் திறன்மிக்கவர்களாக உருவாக்க இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Entrepreneurship in Mobile Device and Security Technician, Entrepreneurship in Electrical and Domestic Plumbing, Entrepreneurship in Electrical and Domestic Air Conditioning Installation and services Technician ஆகிய துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்த பயிற்சிக்கான நேர்முகத் தேர்வு  நாளை 21ஆம் தேதி காலை 8.15 மணிக்கு ரவாங் சட்டமன்ற உறுப்பினரின் சேவை மையத்தில் நடைபெறவுள்ளது.

தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்வதற்கான வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்கின்றனர்.

No comments:

Post a Comment