Thursday 17 October 2019

பாட்டாளி மக்களின் போராளி டத்தோ சம்பந்தன் - டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்-
பாட்டாளி மக்களின் வாழ்வாதார உயர்வுக்காக பாடுபட்டவர் டத்தோ எம்.சம்பந்தன். இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு மேலவையில் குரல் கொடுத்த தலைவர் அவர் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பல போராட்டங்களுக்கு  மத்தியில் தன்னை தலைவரான உருவாக்கிக் கொண்டார். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஒலித்த சம்பந்தன் தன்னை ஒரு சிறந்த தலைவராகவே உருவாக்கிக் கொண்டார்.

ஐபிஎப் கட்சியில் இணைந்து அமரர் டான்ஶ்ரீ எம்.ஜி.பண்டிதனின் உற்ற  தோழனாகவும் சமுதாயப் போராளியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
ஐபிஎப் கட்சியை ஒரு வலுவான கட்சியாக உருவாக்க டத்தோ சம்பந்தன் அயராது பாடுபட்டார். தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக ஐபிஎப் உருவாவதற்கு பல நடவடிக்கைகளை அவர் தீவிரமாக மேற்கொண்டிருந்தார்.

அன்னாரின் திடீர் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக மேலவை சபாநாயகருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment