Sunday 27 October 2019

தீபாவளி திருநாளை ஒன்றுகூடி கொண்டாடுவோம்- கணபதிராவ்

ஷா ஆலம்-
தீமையை அழித்து நன்மை வெற்றி கொண்ட நாளாக கருதப்படும் தீபாவளி திருநாள் இந்துக்கள் அனைவரின் வாழ்விலும் நன்மை பயப்பதாக அமைந்திட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் ஒற்றுமையை கடைபிடித்து அனைத்து மக்களுடன் சகிப்புத்தன்மையுடனும் சகோதரத்துவத்துடனும் பழகி வருகின்றனர்.

முந்தைய காலங்களில் தீபாவளி பெருநாட்களின்போது அருகிலுள்ள பிற இன மக்களுடனும் ஒன்றாக கூடி கொண்டாடி மகிழ்ந்தோம். விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற இந்தியர்கள் இந்த பெருநாளில் அனைத்து மக்களுடனும் அன்பை பரிமாறிக் கொள்வோம்.

அதோடு, ஆடம்பரச் செலவுகள் ஏதுமின்றி ‘விரலுக்கேற்ற வீக்கம் போல’ சிக்கனமான முறையில் தீபாவளி பெருநாளை குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடி மகிழ்வோம்.

அனைவரின் வீட்டிலும் பிரகாசிக்கும் தீப ஒளி போல் அனைவரின் மனதிலும்
மகிழ்ச்சியும் குதூகலமும் என்றும் நிலைபெற்றிருக்க வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
ADVERTISEMENT

No comments:

Post a Comment