Wednesday 30 October 2019

எல்டிடிஇ: பாலமுருகன், அர்விந்த் தடுப்பு காவல் நீடிப்பு

ரா.தங்கமணி

கோலகங்சார்-
விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த  இரு ஆடவர்கள் இன்று காலை கோலகங்சார் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்,
விடுதலைப்புலிகள் இயக்கம் சார்ந்த உபகரணப் பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக டாக்சி ஓட்டுனர் பாலமுருகனும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக பொறியாளர் அரவிந்தன் ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தன் பேரில் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவருக்கான தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப இவ்விருவர் மீதான விசாரணையை நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்
நீதிபதி நோராய்னி.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உயிரூட்ட முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

    

No comments:

Post a Comment