Wednesday 23 October 2019

12 பேரின் விடுதலைக்காக மெழுகுவர்த்தி ஏந்தி ஒன்றுகூடல்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் 'சொஸ்மா' சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஒன்றுகூடல் நடத்தப்பட்டது

இன்றிரவு புக்கிட் அமான் தலைமையக வாசலில்  பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உட்பட சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ், சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ, பொதுமக்கள் திரண்டனர்.

சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தவறு புரிந்திருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துக; ஆதாரம் இருந்தால் தண்டனை வழங்குக. அதை விடுத்து மனித உரிமை மீறலாக கருதப்படும் சொஸ்மா சட்டத்தில் தடுத்து வைத்திருப்பது ஏன்? என்று  ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கொட்டும் மழையையும் கருதாமல் நூற்றுக்கணக்கானோர் திரண்டு 12 பேரையும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment