Monday 8 June 2020

அணி தாவும் 'தவளை'களை தடுக்க சட்டம் இயற்றுக- ராய்டு கோரிக்கை

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
மக்களின் வாக்குகளை பெற்று சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சுயலாபத்திற்கா 'அசி மாறும் தவளைகளாக' உருவெடுப்பதை தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மலேசிய இந்தியர் குரல் அமைப்பின் ஆலோசகர் வீ.ராயுடு வலியிறுத்தினார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கையின் அடிப்படையில்  மக்களினம் வாக்குகளை பெற்று மக்கள் பிரதிநிதிகளாக உருவெடுத்தவர்களு இன்று நம்பிக்கை துரோகிகளாக மாறியுள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் மக்கள் தேர்ந்தெடுத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை கவிழ்க்க சுயநலவாதிகள் 'தவளைகளாக' மாறியுள்ளனர்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள பிரதிநிதிகள் அனைவரும் தங்களின் சுய அடையாளத்தில் வெற்றி பெறவில்லை. மாறாக கட்சியின் சின்னம், போட்டியிடும் கூட்டணியின் அடிப்படையிலேயே வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

நிலையை இவ்வாறு இருக்க வெற்றி பெற்ற பின் அணி மாறுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து புதிய ஆட்சியை அமைப்பதும் ஜனநாயக நாட்டில் தவறான முன்னுதாரணமாகும்.

இதனை தடுக்கும் வகையில் கட்சி தாவல் தடை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

கட்சி தாவல் செய்யும் மக்கள் பிரதிநிதியின் பதவி பறிக்கப்படுவதோடு கடுமையான அபராதமும் தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் ஜனநாயக நாட்டில் பொதுத் தேர்தல் மீது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை பிறக்கும் என்று ராய்டு தெரிவித்தார்.

No comments:

Post a Comment