Monday 1 June 2020

டிஏபி, பிகேஆர், அமானா இல்லாத ஒற்றுமை அரசாங்த்தை மகாதீர் முன்மொழிந்தார்- ஸாயிட் ஹமிடி குற்றச்சாட்டு

கோலாலம்பூர்-
டிஏபி, பிகேஆர்,அமானா ஆகிய கட்சிகள் இல்லாத ஒற்றுமை அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான சந்திப்புக் கூட்டமே பிப்ரவரி 23ஆம் தேதி நிகழ்ந்தது என்று அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

ஷெராட்டன் நடவடிக்கைக்கு முன்னதாக நடைபெற்ற இந்த சந்திப்புக் கூட்டத்தில் சில ஒப்புதல்கள் முடிவெடுக்கப்பட்டதாகவும் ஆனால் துன் மகாதீர் அந்த ஒப்புதல்களை மீறிவிட்டார் என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் கசிந்த அரசியல் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் டிஏபி, பிகேஆர் (அன்வார்), அமானா ஆகிய கட்சிகள் இல்லாத ஒற்றுமை அரசாங்கம் அமைவதை துன் மகாதீர் முன்மொழிந்தார்.

இதுதான் இந்த சந்திப்பில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பதல் ஆகும் என்று அவர் விவரித்தார்.

ஆனால் அந்த சந்திப்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கும் முடிவை துன் மகாதீர் மீறியதால் அப்போது வழங்கப்பட்ட ஆதரவை தாங்கள் மீட்டுக் கொண்டதாக ஸாயிட் ஹமிடி விவரித்தார்.

சமூக ஊடகங்களில் கசிந்த சர்ச்சைக்குரிய புகைப்படத்தில் ஸாயிட் ஹமிடி, ஜிபிஎஸ் கட்சியின் தலைவர் அபாங் ஜோஹாரி ஒபெங், பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின், வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டால், பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி, பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் ஆகியோர் துன் மகாதீர் காணப்படுள்ளனர்.

No comments:

Post a Comment