Tuesday 23 June 2020

திருமணப் பதிவில் மூவருக்கு மட்டும் அனுமதியா? ஜேபிஎன் முடிவில் நிலவும் அத...

கோலாலம்பூர்-
பதிவு திருமணத்தின்போது மூவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்ற தேசிய பதிவுத் துறையின் முடிவு புதிய திருமண ஜோடிகள் கலக்கத்தில் உள்ளனர்.

ஜூலை 1ஆம் தேதி முதல் பதிவு திருமணத்தில் இரு சாட்சியாளர்கள், ஒரு புகைப்படக் கலைஞர் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி என தேசிய பதிவுத் துறை அறிவித்துள்ளதாக திருமணப் பதவதிகாரி ஒருவர் ஊடக்கத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.


கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனும் நோக்கில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும் தியேட்டர்கள், மால்களில் எல்லாம் 250க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருமணம் புரியவிருக்கும்  தம்பதியரின் திருமணத்தை பெற்றோர்கள் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவது எவ்வகையில் நியாயமாகும்? என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

பொது இடங்களில் கூட சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 20 பேருக்கு அனுமதி அளிக்கப்படும் சூழலில் பதிவு திருமணத்திற்கு மூவருக்கு மட்டுமே அனுமதி என்பதை ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என்பதை தேசிய பதிவுத் துறை உணர வேண்டும்.

No comments:

Post a Comment