Wednesday 3 June 2020

கோவிட்-19: கோலலங்காட்டில் பிகேபிபி மீண்டும் அமலாக்கம்

பந்திங்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததை அடுத்து சிலாங்கூர், பந்திங்கில் கோலலங்காட், தாமான் உத்தாமா, தாமான் லங்காட் முர்னி ஆகிய பகுதிகளில் விதிமுறைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வட்டாரத்தில் உள்ள 20 வெளிநாட்டினருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது என்று கோலலங்காட் மாவட்ட மன்றம் கூறியது.

இவ்விரு பகுதிகளை சுற்றிலும் முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன. இரண்டு மாடி கட்டடங்களை கொண்ட மூன்று தொகுதிகளை இந்த பகுதி உள்ளடக்கியுள்ளது. இங்கு உள்ளூர்வாசிகளுடன் அந்நிய நாட்டவர்களும் வசித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment