Tuesday 9 June 2020

ஒரு வாரத்திற்குள் ஆட்சியை கைப்பற்றுவோம்- ப.ஹராப்பான் வியூகம்

கோலாலம்பூர்-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் வியூகமாகவே இன்றைய பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டம் அமைந்துள்ளதாக ஆருடங்கள் வலுக்கின்றன.

ஒரு வார காலகட்டத்திற்குள் இந்த ஆட்சி மாற்றம் அரங்கேற்றப்படலாம். அதன் தொடர்பாக விவாதிக்கவே இன்றைய கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிகேஆர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வாருடன் துன் மகாதீர், ஜசெக செயலாளர் லிம் குவான் எங், பக்காத்தான் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment