Wednesday 3 June 2020

இறுதி தோட்டா வரை போராடிய பிரபாகரன் - சரத் பொன்சேகா பெருமிதம்

கொழும்பு-
தமிழீழம் அவைவதற்காக தனது இறுதி மூச்சுவரை போராட்டம் நடத்திய விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தாம் பெரிதும் மதிப்பதாக இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடையும் இறுதி தோட்டா வரை பிரபாகரம் போராடியுள்ளார்.  ஒரு பயங்கரவாதியாக இருந்தாலும் இறுதி தோட்டா வரை பிரபாகரன் போராடியுள்ளதை பார்க்கும்போது ஒரு ராணுவ வீரனாக அவரை பெரிதும் மதிக்கிறேன்.

விடுதலைப் புலிகளின் அனைத்துப் பகுதிகளையும் இலங்கைப் படை கைப்பற்றியதாக 2009 மே 18ஆம் தேதி உலகிற்கு அறிவித்தோம். ஆனால், மே 19ஆம்   முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக நினைவுகூர்ந்த அவர், 19ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நிறைவு செய்து அலுவலகத்திற்கு செல்லும் வேளையிலே பிரபாகரன் உயிரிழந்தது தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றன.
யுத்தம் முடிவடைந்ததாக அறிவித்த போதிலும், அங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அந்த தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதன் பின்னரே பிரபாகரனின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பிரபாகரனை கொன்றதே சரியான விஷயம் என தான் எண்ணுவதாக அவர் சுட்டிக்காட்டினார்..

ஏனெனில், பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால், அவர் இன்றைய காலப் பகுதியில் ஒரு பிரபலமான நபராக இருந்திருப்பார் என அவர் குறிப்பிடுகின்றார்.

பிரபாகரனை உயிருடன் பிடித்திருந்தாலும், இன்றைய தினத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை அவர் தனது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியாக மாற்றியிருப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது.
 
பிரபாகரன் பயங்கரவாதியாக இருந்தாலும், இறுதித் தோட்ட வரை அவர் போராடியதை பார்க்கும்போது, தான் ஒரு ராணுவ வீரனாக அவரை பெரிதும் மதிப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment