Thursday 31 October 2019

பென்னி தயால்- ஆண்ட்ரியா கலக்கும் ‘மாஸ் ஆப் பேட்ட ராப்’ இசை நிகழ்ச்சி

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
அரேனா குளோபல் இன்டர்நேஷனல் ஏற்பாட்டில் தமிழ்த் திரைப்பட பாடகர்கள் பென்னி தயால்- ஆண்ட்ரியா ஆகியோரின் இசை படைப்பில் மாஸ் ஆப் பேட்ட ராப்’ இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
டத்தோ ஈஸ்வரன் பெருமாள் வழங்கும் இந்த இசை வரும் டிசம்பர் 21ஆம் தேதி செராஸ் பிஜிஆர்எம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ரசிகர்கள் விரும்பும் வகையில் ஒரு மாறுபட்ட இசை நிகழ்ச்சியாக இது அமையும் என கூறிய பென்னி தயால், நான்கு மணி நேரமும் முழுக்க முழுக்க ரசிகர்களை கொண்டாட்டம் போட்ட வைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழ் நாட்டு கலைஞர்கள் மட்டுமல்லாது உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையி ஹேவொக் பிரதர்ஸ் நவீன் – மதன் ஆகியோரும் இதில் இசை விருந்து படைக்கவுள்ளனர்

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கும் என தாம் நம்புவதாக கூறிய டத்தின் தீபா, இனி தொடர்ந்தாற்போல் பல நிகழ்ச்சிகளை படைக்க அரேனா குளோபல் இண்டர்நேஷனல் திட்டம் வகுத்துள்ளது என்று தெரிவித்தார்.

‘மாஸ் ஆப் பேட்ட ராப்’ இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை பெற விரும்புவோர் அரோனா குளோபல் இண்டர்நேஷனலின் அகப்பக்கம், முகநூல் பக்கத்தை நாடலாம்.

ADVERTISEMENT

No comments:

Post a Comment