Thursday 24 October 2019

‘ராட்சசன்’ பாணியில் சஸ்பென்ஸ் திரில்லர் ‘யாழி’; ஆனால் கொலை களம் அல்ல!

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
தீபாவளி திருநாளை முன்னிட்டு உள்ளூர் கலைஞர்களின் கைவண்ணத்தில் மலரவுள்ளது ‘யாழி’ தொடர். இயக்குனர் ரவிவர்மா விக்ரமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தொடரில் கவிதா தியாகராஜன்வினோஷான்நிவாதரன் உட்பட பல முன்னணி கலைஞர்களும் நடித்துள்ளனர். ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் இத்தொடரில் கதாநாயகியின் தம்பி காணாமல் போய் மீண்டும் குடும்பத்தினரிடம் திரும்பி சேர்ந்து தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னையை மாற்றி கொள்கிறாரா இல்லையா என்பது கதையாகும்.
கடந்தாண்டு ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பான ‘ராட்சசன்’ திரைப்டம் பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெற்றதை இவ்வாண்டு ஆஸ்ட்ரோவின் முயற்சியில் திரில்லர் பாணியில் ‘யாழி’ தொடர் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர் முருகையா வெள்ளை தெரிவித்தார்.

சஸ்பென்ஸ், திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த தொடர் ரசிகர்களை கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பம், சென்டிமெண்ட், சஸ்பென்ஸ் என ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘யாழி’ தொடர் இன்று 23ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை இரவு 9.00 மணிக்கு வானவில்லில் (அலைவரிசை 201) ஒளியேறவுள்ளது.

யாழி’ தொடரில் நடித்துள்ள கலைஞர்களின் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
கவிதா தியாகராஜன்
யாழி’ தொடரில் ஆர்.வி.செளமியா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். 10 வருடங்களாக காணாமல் போன தம்பியை தேடும் கனமான பாத்திரத்தில் நடித்துள்ளேண். அம்மா, தம்பி என குடும்ப உறவுகளை சூழந்த பிரச்சினையில் காணாமல் போன தம்பியாக வருபவர் உண்மையில் என் தம்பிதானா? என சஸ்பென்சாக கதை நகர்கிறது. இதற்கு முன்பு பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் இந்த தொடரில் ஏற்றுள்ள கதாபாத்திரம் நிச்சயம் தனது கேரியரில் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. மாறுபட்ட கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களை கவரச் செய்யும்.

வினோஷன்
யாழி’ தொடரில் காணாமல் போன தம்பி சஞ்சய்-ஆக நான் நடித்துள்ளேன். இந்த தொடர் சஸ்பென்ஸ், திரில்லர் நிறைந்தது என்றால் குற்ற்ச்செயல், வன்முறை நிறைந்தது அல்ல. குடும்ப உறவுகளை சித்தரித்து அந்த உறவுகளுக்கு நிகழும் பாசப் போராட்டமே சஸ்பென்சாக அமைந்துள்ளது. இன்றைய ரசிகர்கள் ஒரு திரைப்படத்தில் என்ன எதிர்பார்க்கிறார்களோ அவை அனைத்தும் இந்த தொடரில் உள்ளது.

கே.நிவாதரன்
யாழி’ தொடர் தீபாவளி திருநாளாக மலேசிய ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அக்கா, தம்பி ஆகிய இருவருக்குள் நடக்கும் பாசப் போராட்டத்தில் தனது கதாபாத்திரம் வலிமை வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுபாஷினி அசோகன், சுதாகர், கலைவாணி, குணசேகரன் உட்பட பல கலைஞர்கள் நடித்துள்ள ‘யாழி’ தொடரை மலேசிய ரசிகர்கள் கண்டு களிக்க வேண்டும் என்று இவர்கள் கேட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment