Friday 18 October 2019

21 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி- கணபதிராவ் வழங்கினார்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
வசதி குறைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவிடும் வகையில் 21 மாணவர்களுக்கு 91,333 வெள்ளி மதிப்புடைய காசோலைகளை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வழங்கினார்.
கடந்தாண்டில் 100 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்நிதி இவ்வாண்டு 152 மாணவர்களாக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் நான் ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றது முதல் முன்னெடுத்து வரும் நடவடிக்கையாகும்.

இந்திய மாணவர்களுக்கான கல்வி நலத் திட்டங்களுக்கு சிலாங்கூர்  மாநில அரசாங்கம் தனியாக நிதி வழங்குவதில்லை. மாறாக, நான் ஆட்சிக்குழு உறுப்பினராக  பொறுப்பேற்றது முதல் நிகழ்ச்சிகளுக்கு செலவிடப்படும் வீண் செலவுகளை குறைத்து அதன் மூலம் சேமிக்கப்படும் நிதி இம்மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாண்டில் மட்டும் இந்திய மாணவர்களின் கல்வி உதவி நிதியாக 10 லட்சம் வெள்ளிக்கு மேல் வழங்கியிருப்பதாக கூறிய அவர், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேருந்து கட்டணமாக 3,500 பேருக்கு தலா வெ.300 வழங்கப்படுவதாக சொன்னார்.
இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு மட்டுமின்றி தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் ஆகியவற்றுக்கும் மாநில அரசாங்கம் மானியங்களை வழங்கி வருகிறது என கணபதிராவ் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment