Sunday 27 October 2019

பிரதமர் பதவியில் நீடித்திருக்கும் காலத்தை பக்காத்தான் தலைமைத்துவ மன்றம் தீர்மானிக்கும்

கோலாலம்பூர்-
தாம் பிரதமர் பதவியில் நீடித்திருப்பது குறித்து பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவம் தீர்மானிக்கும் என்று பிரதமர் துன் மகாதீர் முகம்மது தெரிவித்தார்.

14ஆவது பொதுத் தேர்தலில் தாம் பிரதமர் பதவியை ஏற்பது குறித்து இவர்கள் தான் முடிவெடுத்தனர். தாம் இப்பதவியில் எவ்வளவு நாட்கள் நிலைத்திருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் இவர்களுக்கே உள்ளது என்று அவர் சொன்னார்.

இன்றைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தவணை முழுமைக்கும் தாம் பிரதமர் பதவியில் நீடிப்பதற்கு முழு ஆதரவு வழங்குவதாக கூறியுள்ளது அவர்களது தனிபட்ட கருத்தே ஆகும் என்றார் அவர்.

அடுத்த பொதுத் தேர்தல் வரை பிரதமர் பதவியில் துன் மகாதீர் நீடித்திருப்பதற்கு முழு ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அறிவித்திருந்தனர்.

Advetisement



No comments:

Post a Comment