Tuesday 22 October 2019

எல்டிடிஇ: மஇகாவின் சட்ட உதவியை தவறாகக் கொள்ள வேண்டாம் - பாஸ்

கோலாலம்பூர்-
விடுதலைப் புலிகள் தொடர்பு கொண்டிருந்தவர்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்கும் மஇகாவின் நோக்கத்தை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்று பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே. அவர்கள் குற்றம் புரிந்தார்களா? இல்லையா? என்பதை நிரூபிக்க விசாரணை நடத்தப்படுவது அவசியமாகும்.

அதன் அடிப்படையில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் மஇகா உதவ முன்வந்திருப்பது வரவேற்கக்கூடியதாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயன்றனர் எனும் குற்றச்சாட்டின் கீழ் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு மஇகா சட்ட உதவியை வழங்கும் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அண்மையில் அறிவித்தார்.

No comments:

Post a Comment