Tuesday 22 October 2019

ஆயுதப் போராட்டம் தமிழீழத்திற்கு விடியலாகாது- இராமசாமி

ரா.தங்கமணி

பெட்டாலிங் ஜெயா-
ஆயுதப் போராட்டம் தமிழீழத்திற்கு ஒருபோதும் விடியலாக அமைந்திடாது என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி விவரித்தார்.

ஆயுதத்தின்  வழி தங்களின் இன உரிமைக்காக போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளின் ஆதரோடு இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளை அழித்தொழித்ததாக கூறியது.

அதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் செயல் நடவடிக்கைகள் 10 ஆண்டுகளாக செயலற்று கிடக்கிறது.

தமிழீழத்தை மலரச் செய்வதற்காக மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டம் உருவாகும் என்பது தற்போது சாத்தியதில்லாத ஒன்று.

அதோடு, ஆயுதப் போராட்டத்தின் தமிழீழத்திற்கான விடியலாக அமைந்து விடாது. ஆயுதப் போராட்டத்தை காட்டிலும் அமைதியான முறையில் ஜனநாயக வழியில் தமிழீழம் மலர்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்று அவர் மேலும் விவரித்தார்.

No comments:

Post a Comment