Monday 10 June 2019

நெடுஞ்சாலைகளில் மெதுவாக நகரும் வாகனங்கள்

கோலாலம்பூர்-
நோன்புப் பெருநாள் விடுமுறையை சொந்த ஊர்களில் கழித்து விட்டு தலைநகருக்கு நிரும்ப பலர் முற்பட்டுள்ள நிலையில் முதன்மை நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக நகரத் தொடங்கியுள்ளன.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூரை நோக்கி செல்லும் தங்காக் - ஜாசின் சாலை மெதுவாக நகர்கின்றன.

பேராவிலிருந்து கோலாலம்பூரை நோக்கி வரும் சிம்பாங் பூலாய், தாப்பா ஓய்வு இடம், பீடோரிலிருந்து சுங்காய் நோக்கி செல்லும் சாலை, புக்கிட் தாகாரிலிருந்து புக்கிட் பெருந்தோங் வரையிலும் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன.

புக்கிட் மேராவிலிருந்து தைப்பிங் (வடக்கு) செல்லும் சாலையின் 204.2ஆவது கிலோ மீட்டரில் சாலை விபத்து நிகழ்ந்துள்ளதால் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன.

காராக்கிலிருந்து பெந்தோங் டோல் சாவடியிலும்,  லெந்தாங்கிலிருந்து  புக்கிட் திங்கி வரையிலும் வாகனங்கள் மெதுவாக நகர்வதாக சாலை போக்குவரத்து தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment