Wednesday 26 June 2019

மாணவிக்கு பிரம்படி; மாநில கல்வி இலாகா விசாரணை தொடங்கியது

ஜோகூர்பாரு-
இடைநிலைப்பள்ளி மாணவி ஒருவரை கை, கால்களில் வீக்கம் ஏற்படும் அளவுக்கு ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்த சம்பவம் தொடர்பில் மாநில கல்வி இலாகா விசாரணையை தொடங்கியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் ஜோகூர் மாநில கல்வி இலாகாவை தொடர்பு கொண்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட பள்ளியை தொடர்பு கொண்ட போதிலும் பலனில்லை என்று கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங் கூறினார்.

பள்ளி மாணவியை பிரம்பால் அடித்தது காயம் விளைவித்தது தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவியின் தாயார் பள்ளி ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

No comments:

Post a Comment