Wednesday 19 June 2019

உடல் உறுப்புகளுக்காக சிறார் கடத்தலா? மறுத்தார் துணை ஐஜிபி

கோலாலம்பூர்-

உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்படுவதற்காக சிறார்கள் கடத்தப்படுவதாக பொய்யான தகவலை பரப்பு தர்ப்பினர் மீது  தேசிய போலீஸ் படை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று துணை ஐஜிபி டத்தோ மஸ்லான் மன்சோர் குறிப்பிட்டார்
மீண்டும் சமூக ஊடகங்களில் இந்த பொய் தகவல் பகிரப்பட்டு வருகிறது. உடல் உறுப்புகளுக்காக சிறார்கள் கடத்தப்படுவதாக பரப்பப்படும் தகவலை மிக கடுமையாக கருதுகிறோம்.

நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை என்பதை போலீஸ் படை பலமுறை அறிவித்துள்ளது. ஆனாலும் இதுபோன்ற பொய் தகவல்கள் பகிரப்பட்டுதான் வருகின்றன.

உறுதிபடுத்தப்படாத தகவல் எதனையும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், பொய் தகவலை பரப்பும் தரப்பினர் மீது 1998 தகவல் தொடர்பு, பல்லூடக சட்டம் செக்‌ஷன் 233இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment