Wednesday 26 June 2019

அதி முக்கிய சந்திப்பு; துன் மகாதீரை சந்தித்தீர்களா? மாட் சாபுவை சீண்டினார் நஜிப்


கோலாலம்பூர்-
மாஸ் விமானத்தின் தாமதத்தினால் பிரதமர் துன் மகாதீருடனான சந்திப்பை தவறவிட்ட பிறகு அந்த விவகாரம் தொடர்பில் கோலாலம்பூரில் பிரதமரை சந்தித்து பேசினீர்களா? என்று தற்காப்பு அமைச்சர் முகமட் மாட் சாபுவை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் சீண்டியுள்ளார்.
கடந்த 16ஆம் தேதி லண்டனில் துன் மகாதீரை முக்கிய காரணத்திற்காக மாட் சாபு  சந்திக்க இருந்த வேளையில் 15ஆம் தேதி இரவு மாஸ் நிறுவனம் 2 மணி 30 நிமிட தாமதத்திற்கு பின்னர் புறப்பட்டதால் துன் மகாதீரை சந்திக்க முடியாமல் போனது என்று தற்காப்பு அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இது தொடர்பில் முகநூலில் கருத்து பதிவிட்டுள்ள டத்தோஶ்ரீ நஜிப், தோல்வி கண்ட அதி 
முக்கிய விவகாரம் தொடர்பில் கோலாலம்பூர்ல் துன் மகாதீரை சந்தித்து விட்டீர்களா? என கேள்வி எழுப்பியதோடு, இச்சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு பின்னர் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என்றும் அவர் வினவினார்.

No comments:

Post a Comment