Saturday 22 December 2018

மறைந்தவர்களின் பெயரையே பள்ளிகளுக்கு சூட்ட முடியும்- துன் மகாதீர்

கோலாலம்பூர்-
அமைச்சர்களின் பெயர்கள் பள்ளிகளுக்கு சூட்ட வேண்டுமென்றால் அவர்கள் இறந்திருக்க வேண்டும் என்று பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார்.

1974 முதல் 1977 வரை கல்வி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அமைச்சர்களின் பெயரை பள்ளிகளுக்கு சூட்ட தடை விதித்தேன்.

அதனால்தான் இன்றைய காலத்தில் அமைச்சர்களின் பெயர்கள் எந்தவொரு பள்ளிக்கும் சூட்டப்படவில்லை.

ஒருவரின் பெயரை பள்ளிக்கு சூட்டுவதற்கு அவர் மறைந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் எந்தவொரு கட்டடத்திற்கும் எனது பெயரை சூட்டுவதற்கு நான் அனுமதிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment