Sunday 20 January 2019

'பரமபதம்' விளையாடும் விக்னேஷ் பிரபு


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மலேசிய கலைத்துறையில் வளர்ந்து வரும் இயக்குனரான லெ.விக்னேஷ் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் 'பரமபதம்' திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்குறது.

பாரம்பரிய விளையாட்டான 'பரமபதம்' விளையாட்டை மையப்படுத்தி 4 இளைஞர்களிடையே நடக்கும் போராட்ட உணர்வை மர்மமும் திகிலும் நிறைந்த சுவாரஸ்யமான கதைகளத்தோடு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக விக்னேஷ் பிரபு கூறினார்.

தனது முதல் படமான 'சாதுரியன்' திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது படமான 'சாதுரியனு'க்கு நிதியுதவி அளிக்க மலேசிய திரைப்பட வாரியம் இணக்கம் கண்டுள்ளது.

கெடா மாநிலத்தில் உருவாகி தற்போது கோலாலம்பூரில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து வருகின்றது. இவ்வாண்டு பிற்பகுதியில் திரையீடு காணவிருக்கும் இத்திரைப்படத்தில் நாட்டின் முன்னணி கலைஞர்களான கே.எஸ்.மணியம், அகோந்திரன், உமாகாந்தன் உட்பட பல புதுமுக கலைஞர்களும் நடிக்கின்றனர்.

வின்கேஷ் பிரபுவுடன் இணைந்து அவரின் தம்பி தனேஷ் பிரபுவும் இப்படத்தின் இயக்குனராக பணியாற்றி வருகின்றார்.

சாய் நந்தினி  மூவி வேர்ல்டு, டிரீம்ஸ்கைம்ஹோம் புரொடக்‌ஷன் ஆகிய நிறுவனங்களின் இணையுடன் டாக்டர் லட்சபிரபு இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் விக்னேஷ் பிரபுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை 'பாரதம்' மின்னியல் ஊடகம் கூறிக் கொள்கிறது.

No comments:

Post a Comment