Friday 4 January 2019

எரிபொருளின் புதிய விலை நாளை அறிவிக்கப்படலாம்

கோலாலம்பூர்-
எரிபொருளுக்கான புதிய விலை அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நாளை அறிவிக்கப்படலாம் என்று உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் நலத்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த புதிய எரிபொருளுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார் அவர்.

இவ்வாரம் சரிவு காணும் என எதிர்பார்க்கப்பட்ட எரிபொருளின் விலை பெட்ரோல் நிலைய உரிமையாளர்களின் கோரிக்கையினால் ஒத்திவைக்கப்பட்டது

சம்பந்தப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை பிரதமர் துன் மகாதீர் செவிமடுத்துள்ள நிலையில் புதிய எரிபொருளுக்கான விலை அறிவிக்கப்பட்டவுள்ளது.

No comments:

Post a Comment