Monday 7 January 2019

மாமன்னர் பதவியிலிருந்து விலகினார் சுல்தான் முகமட் வி

கோலாலம்பூர்-
நாட்டின் 15ஆவது மாமன்னர் சுல்தான் முகமட் வி தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டதாக இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவரின் இந்த பதவி விலகல் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த 2016 டிசம்பர் 13ஆம் தேதி நாட்டின் மாமன்னராக பொறுப்பேற்ற சுல்தான் முகமட் வி, தனது ஈராண்டு கால பதவியின்போது தமக்கு ஒத்துழைப்பு நல்கிய ஆட்சியாளர்களும் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment