Saturday 5 January 2019

டெலிகோம் சேவை மையம் மீண்டும் செயல்பட கேசவன் களமிறங்குவாரா? - மணிமாறன் கேள்வி

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் அமைந்திருந்த டெலிகோம் நிறுவனத்தின் சேவை மையம் மூடப்பட்டதால் இங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் தெரிவித்தார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இங்கு செயல்பட்டு வந்த  சேவை மையம் மூடப்பட்டதோடு கட்டணம் செலுத்த, சேவைகளை பெற கோலகங்சார் அல்லது ஈப்போ வட்டாரத்திலுள்ள சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவனின் கவனத்திற்குக் கொண்டு சென்ற போதிலும் இன்னமும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இருப்பது மக்களுக்கு மேலும் துன்பத்தை அளிக்கிறது.

14ஆவது தேர்தலுக்கு முன்னர் மஇகா இங்கு எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் துரிதமான சேவைகளை வழங்கியது. சுங்கை சிப்புட் ரயில் நிலையத்திலிருந்து  ஈடிஎஸ் எனப்படும் மின்சார ரயில் சேவை பயணத்திற்கான அட்டவணை கூட இங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது இங்கு ரயில் பயண அட்டவணை மாற்றப்பட்டு பயண நேரங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.

ஆளும் கட்சியைச் சேர்ந்த கேசவன் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்ற போதிலும் இதுபோன்ற மக்களுக்கு பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண களமிறங்க வேண்டும் என்று மணிமாறன் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment