Thursday 17 January 2019

திருடப்பட்டது தலைவர் பதவி; ரத்தானது கட்சி பதிவு - மனம் திறந்தார் கேவியஸ்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவரான எனது பதவி நள்ளிரவு வேளையில் திருடப்பட்டதன் விளைவாகவே இன்று அக்கட்சி தனது பதிவை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் விவரித்தார்.

கட்சியின் தேசியத் தலைவர் பதவியை ஹோட்டல்களிலோ உணகவங்களிலோ அமர்ந்து தீர்மானிக்க முடியாது. அதற்கென்று சில சட்ட நெறிமுறைகள் விரிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

ஆனால் கட்சியின் சட்ட விதிகளை மதிக்காமல் பதவி ஆசையில் சில தரப்பினர் மேற்கொண்ட முயற்சியின் விளைவு இன்று கட்சியை அழிவு பாதைக்குக் கொண்டு சென்றுள்ளது.

கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்களாக இருந்த டத்தோஶ்ரீ மெக்லின் டி குருஸ் உட்பட 14 பேர் ஹோட்டலில் அமர்ந்து தன்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டதாக அறிவித்து மறுநாள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

மைபிபிபி கட்சியின் சட்டவிதிபடி கட்சி தலைவரை நீக்க வேண்டுமானால் அவசர பொதுக்கூட்டம் கூட்டியாக வேண்டும். அதன் பின்னரே புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கட்சியின் தலைவரை ஹோட்டலில் அமர்ந்து பதவியிலிருந்து நீக்க முடியாது. நானே விருப்பப்பட்டு அப்பதவியை வேறொருவருக்கு விட்டுக் கொடுக்க முடியாது. கட்சி பேராளர்களின் ஒருமித்த ஆதரவுடனே தலைவர் பதவிக்கு ஒருவரை நியமிக்க முடியும்.

இத்தகைய சட்டவிதிகள் எதுவும் தெரியாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்பட்டதால்தான் கட்சி பதிவு ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.
குறிப்பு: டான்ஶ்ரீ கேவியசின் விரிவான விளக்கம் தொடர்ந்து இடம்பெறும்.

No comments:

Post a Comment