Tuesday 15 January 2019

மஇகாவினரின் அரசியல் சுயநலமே கேமரன் மலையை கைநழுவச் செய்தது - கணபதிராவ்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
சீபிட்டு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் மஇகா தலைவர்கள் சிலர் அரசியல் சுயலாபத்திற்காக முன்னெடுத்த நடவடிக்கைககளாலேயே  கேமரன் மலையில் போட்டியிடாமல் ம இகா ஒதுங்கி கொண்டிருக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

தங்களின் பாரம்பரியத் தொகுதியான கேமரன் மலையில் ம இகா போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதற்கு சீபில்ட் ஆலய மோதலை அதன் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் காரணம் காட்டியுள்ளார்.

ஆனால் சுமூகமான முறையில் தீர்க்கப்பட வேண்டிய இவ்வாலய விவகாரத்தை தங்களின் சுயநல அரசியல் லாபத்திற்காக ஒரு போராட்டமாக மஇகா தலைவர்கள் மாற்றியதன் விளைவே ஆலய மோதலும் அதனை தொடர்ந்த ஓர் உயிரிழப்பும் ஆகும்.


இன்று அதன் பாதிப்பினால் மலாய்க்காரர்களின் வாக்குகளை பெற முடியாது என்பதால் தொகுதியை அம்னோவுக்கு கொடுத்துள்ளோம் என்று கூறும் மஇகா, அரசியல் சுயலாபத்தினால் தாங்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர வேண்டும்.

அதேபோன்றுதான் தற்போது செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரத்திலும் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக சில தரப்பினர் இவ்விவகாரத்தை பூதாகரமாக உருவாக்க முற்படுகின்றனர்.

இப்போதுதான் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மத்திய அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளது. கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது அவர்களது கூட்டணியில் இருந்த தலைவர்கள் இப்பிரச்சினைக்கு அப்போது ஒரு தீர்வையும் காண முற்படாதபோது இப்போது மட்டும் உரிமைக்காக போராடுவதாக சுயநல நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கின்றனர் என்று கணபதிராவ் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment