Friday 4 January 2019

6 மாதங்களுக்கு எச்சரிக்கை மட்டுமே; அபராதம் கிடையாது

புத்ராஜெயா-
பொது இடங்களில் சிகரெட் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 மாதங்களுக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்படாது என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் முதல் ஆறு மாதங்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்படும் என்றும் ஆறு மாதங்களுக்கு பின்னர் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


ஜனவரி 1ஆம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment