Saturday 29 July 2017

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட்டில் தனுஷ்



'ரஞ்சனா' படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் தனுஷ். இப்படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் நடிக்க போவதாக தெரியவந்துள்ளது.

டைரக்டர் ஆனந்த் எல் ராய் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளாராம். தற்போது ஷாருக்கானை வைத்து ஆனந்த் எல் ராய் படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடனே எனது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றார்.

ஆனந்த் எல் ராய் படத்தில் நடிக்கபோவது உண்மை என்று தனுஷ் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment