Friday 7 July 2017

கெடா மாநில சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு வெ. 50 ஆயிரம் செலவில் புதிய ஹாக்கி மைதானம்



சுங்கைப்பட்டாணி-
கெடா மாநில சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஹாக்கி மைதானத்தை மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ  ஆர்.எஸ்.தனேந்திரன் அண்மையில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இப்பள்ளியின் தலைமையாசிரியர் கலைச்செல்வன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும், .... கௌரவப் பொருளாளருமான ஓஜி. சண்முகம் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க டத்தோஸ்ரீ  தனேந்திரன்  வழங்கிய வெ.50,000 நிதியொதுக்கீட்டில் இம்மைதானம் (ஹாக்கி) புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.

அத்துடன் அங்கு நடைபெற்ற பள்ளி அளவிலான ஹாக்கி போட்டி விளையாட்டில் சுமார் 15 பள்ளிகள் பங்கேற்றன. அதில் 25 குழுக்கள்  கலந்து கொண்டன.


இப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் டத்தோஶ்ரீ தனேந்திரன் கலந்துகொண்டு இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்களை வழங்கினார்.

அதோடு டத்தோ ஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் ஹோக்கி போட்டி சுழல் கிண்ணம் ஆண்டு நடைபெறும் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ம...க கெடா மாநில பொறுப்பாளர்கள், பள்ளியின் பெ... பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment