Sunday 30 July 2017

வேட்பாளராக எத்தரப்பும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டாம்!

மலாக்கா-
மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களையே நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் வேட்பாளராக களமிறக்க அம்னோவும் தேசிய முன்னணியும் முன்னுரிமை அளிக்கும் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ  அஹ்மட் ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

இத்தேர்தலில் எத்தகைய தரப்பினரும் தாம் தான் வேட்பாளர் என பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டாம். ஏனெனில் மக்கள் வெற்றி பெற செய்யும் வேட்பாளர் யார் என்பது பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு தெரியும்.

14ஆவது பொதுத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு  முக்கியமானது எதுவென்றால் மக்களின் தேர்வும், மக்களின் ஆர்வமும் தான். மக்களுக்கு யார் தேவையோ அவர்களுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படும். மக்களுக்கு யார் வேண்டுமோ அதனையே பிரதமர் கொடுப்பார்.

ஆதலால் எந்தவொரு தரப்பும் வேட்பாளராக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டாம். மக்களுக்கு வேண்டாத வேட்பாளரை தேர்ந்தெடுத்து ஓர் இக்கட்டான சூழலை பிரதமர் இம்முறை ஏற்படுத்தி கொள்ள மாட்டார். மக்கள் ஒதுக்கி வைக்கும் வேட்பாளர் இம்முறை நமக்கு தேவையில்லை என தங்கா பத்து அம்னோ தொகுதி கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கூறினார்.


No comments:

Post a Comment