Saturday 29 July 2017

'குற்றவாளியே'! பாக். உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! பறிபோனது நவாஸ் ஷரீப் பதவி

ஸ்லாமாபாத்-
ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் குற்றவாளியே என தீர்ப்பளித்ததை தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பனாமா ஆவணங்களில் பல உலகத் தலைவர்களுடன் நவாஸ் ஹரீப்பின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரது குடும்ப சொத்துகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் நாடு கடந்து வரியற்ற பிரதேசங்களில் அமைந்துள்ள சில நிறுவனங்களில் நவாஸ் ஷரீப்பின் பிள்ளைகளுக்கு பங்கு இருப்பது அம்பலமானது. மேலும் அவர் பல சொத்துகளை லண்டனில் வாங்கியிருப்பதும் தெரிய வந்தது.

உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நவாஸ் ஷரீப்புக்கு எதிராக ஐந்து நீதிபதிகளும் ஏகமனதாக தீர்ப்பளித்தனர்.

நாடு கடந்த வரியற்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களில் சட்டவிரோதமாக பங்கு வைத்திருந்ததால் அவர் பிரதமர் பதவிக்கே தகுதியில்லாதவர் என்பதோடு அவரை உடனடியாக கைது செய்யும்படியும் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

இனி வாழ்நாள் முழுவதும் நவாஸ்  ஷரீப் பிரதமர் பதவிக்கே வர முடியாது என தீர்ப்பில் கூறப்பட்டதோடு நிதியமைச்சர் இஷாக் தாரும் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தமது பிரதமர் பதவியை நவாஸ் ராஜினாமா செய்துள்ளார் என பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை கூறியது.



No comments:

Post a Comment