Sunday 30 July 2017

மலேசியாவில் பணியாற்றும் 17 லட்சம் அந்நிய நாட்டவர்கள்

கோலாலம்பூர்-
ந்நாட்டிலுள்ள அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 17 லட்சத்து 88 ஆயிரம் என உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இது கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் எண்ணிக்கையாகும்.

இதில் உள்துறை அமைச்சு தத்தம் நாடுகளுக்கேற்ப வகைப்படுத்தியதில் நம் நாட்டில் 7 லட்சத்து 28 ஆயிரம் இந்தோனேசியர்கள் உள்ளனர். இதையடுத்து 405,898 நேப்பாளியர்கள், 221,089 வங்காளதேசிகள், 127, 705 மியன்மார்காரர்கள், 114, 455 இந்தியர்கள், 5,964 இலங்கையர்கள், 5,103 கம்போடியர்கள் உட்பட லாவோஸ் நாட்டை சேர்ந்தவர்களும் உள்ளனர் இந்நாட்டில் வேலை செய்கின்றனர்.

இணையம் வழி 15 நாடுகளைச் சேர்ந்த அந்நியத் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தும் திட்டம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருந்து வருகிறது. இந்த திட்டம் அந்தியத் தொழிலாளர்கள் சட்டப்படி முறையான வேலைஅனுமதி அட்டையுடன் மலேசியாவில் பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

அந்நியத் தொழிலாளர்களை தங்களின் நாடுகளுக்கு ஏற்றவாறு வகைப்படுத்தும்படி செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் (ஜசெக) தெரேசா கோக் அமைச்சிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அமைச்சு இந்த தகவலை தெரிவித்தது.

No comments:

Post a Comment