Thursday 12 March 2020

சம்பளத்தை குறைக்க முன்வந்தார் பிரதமர்

புத்ராஜெயா-
அரசின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில் அமைச்சரவை உறுப்பினர்கள் சம்பளத்தை  குறைக்க பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் உத்தேசித்துள்ளார்.
இன்று நடைபெற்ற தேசிய கூட்டணி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் சம்பளம் குறைப்பு பற்றி விவாதிக்கப்படவில்லை என்றாலும் தனது சம்பளத்தை குறைக்க அவர் முன்வந்துள்ளார்.

தனது சம்பளத்தில் இருந்து 5 முதல் 10 விழுக்காடு வரை குறைக்க பிரதமர் முன்வந்துள்ளார்.

இவ்வாறு செய்வதன் மூதல் அரசு எதிர்நோக்கியுள்ள நிதிச் சுமையை குறைக்க முடியும் என்பதோடு இதன் வழி மில்லியன் கணக்கில் நிதி சேமிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment