Thursday 12 March 2020

தான் இல்லையென்றால் அமைச்சரவைக்கு அஸ்மின் அலி தலைமையேற்பார்- பிரதமர்

புத்ராஜெயா-
தான் நாட்டில் இல்லாத நிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முதன்மை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தலைமை தாங்குவார் என்று பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
தேசிய கூட்டணி அரசாங்கத்தில் நான்கு முதன்மை அமைச்சர்களும் ஒரே நிலையிலான பொறுப்பு பிரதமர் இல்லாத நிலையில் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி  அமைச்சரவைக்கு தலைமை தாங்குவார்.

அவரும் நாட்டில் இல்லாத சூழலில் அடுத்த நிலையில் உள்ள அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமை தாங்குவார் என்று டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.

No comments:

Post a Comment