Tuesday 23 July 2019

தேமுவின் பங்காளி கட்சியாக மலேசிய மக்கள் சக்தி கட்சி- தனேந்திரன் பரிந்துரை

நீலாய்-
தேசிய முண்ணனியின் உருமாற்ற நடவடிக்கையில் மலேசிய மக்கள் சக்தி கட்சி அதன் பங்காளி கட்சியாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தினார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேமுவில் தற்போது 3 கட்சிகள் மட்டுமே அங்கத்துவம் பெற்றுள்ளன.

தற்போது தேமுவில் பாஸ் கட்சியை இணைத்துக் கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில் மலேசிய மக்கள் சக்தி கட்சியையும் தேமுவின் பங்காளி கட்சியாக இணைத்துக் கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளோம்.
தேர்தலுக்கு  முன்னரும் பின்னரும் தேமுவுடனே நாங்கள் பயணிக்கிறோம். தேமுவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தது மக்கள் சக்தி கட்சி.

முன்பு எதிரியாக கருதப்பட்ட பாஸ் கட்சியே கூட்டணியில் இடம்பெறும்போது மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வாய்ப்பு வழங்குவது ஒன்றும் தவறாகி விடாது.

இக்கட்சியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான், இது குறித்து தேமு தலைமைத்துவ மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதாக நம்பிக்கை தெரிவித்தார் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.
நீலாயில் நடைபெற்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 11ஆவது மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

No comments:

Post a Comment