Wednesday 24 July 2019

இந்தியர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் பக்காத்தான் கூட்டணி- தனேந்திரன் சாடல்

நீலாய்-

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது வாக்குறுதிகளை அள்ளி வீசிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அதனை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டுள்ளது என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.
இந்தியர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக வாக்குறுதிகள் அள்ளி தெளிக்கப்பட்டன. ஒன்று, இரண்டு அல்ல; 25 வாக்குறுதிகள் இந்திய சமுதாயத்திற்காக வழங்கப்பட்டன.

ஆனால் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியமைத்து ஓராண்டை கடந்து விட்ட போதிலும் இன்னமும் அந்த வாக்குறுதிகளில் ஒன்றைகூட நிறைவேற்றாமல் தடுமாறி கொண்டிருக்கிறது.

வழங்கிய வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த இந்தியர்களுக்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பெரும் ஏமாற்றத்தை மட்டுமே வழங்கியுள்ளது. பக்காத்தான் அரசின் செயல் நடவடிக்கைகள் இந்த ஓராண்டு காலமாக திருப்தியளிக்கும் வகையில் அமையாததால் இந்தியர்கள் இந்த அரசாங்கத்தின் மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இந்தியர்களுக்கு நம்பிக்கை துரோகமே இழைத்துள்ளது.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் ஆட்சியில் இருப்பதை விட விலகியிருப்பதே மேலானது என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 11ஆவது மாநாட்டில் உரையாற்றியபோது டத்தோஶ்ரீ தனேந்திரன் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment